"புற்றுநோயை உருவாக்கும் பஞ்சுமிட்டாய்..."..அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..30 பேருக்கு பறந்த பகிரங்க எச்சரிக்கை - மக்களே உஷார்...!

x

புதுச்சேரியில், அரசால் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு தயார் செய்த பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.புதுச்சேரியில், புகாரின் பேரில் செவிலியர் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் விற்பனை செய்த வண்ணம் கூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரோடமின் - பி என்ற ரசாயனப் பொருட்களை கொண்டு பஞ்சுமிட்டாய் தயாரித்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில இளைஞர்களை போலீசார் உதவியுடன் வரவழைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், வண்ணம் கூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்