எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - காரணம் என்ன?

x

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணையை வெளியிடப்பட்டது... ஆனால் பல ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திருமலைராய சமுத்திரம் திருக்கட்டளை தேக்காட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சியோடு ஊராட்சிகள் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் நிலை ஏற்படும், வீட்டு வரி சொத்து வரி தண்ணீர் வரி உள்ளிட்டவைகள் உயர்த்தப்படும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... ஏற்கனவே ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், திருமலை ராயசமுத்திரம் பகுதி மக்கள் மேட்டுப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் சமாதானம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்