"இது நடக்க கூடாது, நடந்தால்..." போராட்டத்தில் குதித்த மக்கள் - ஈரோட்டில் பரபரப்பு

x

பவானி நகராட்சியுடன் ஆண்டிகுளம் மற்றும் குர்பநாயக்கன்பாளையத்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரண்டு கிராமங்களையும் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்புஏற்பட்டது. தங்களது கிராமங்களை நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை பறிபோகும் எனவும் குடிநீர், குப்பை போன்றவைகளுக்கும் வரிசெலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பொதுமக்கள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்