விதிகளை மீறும் தனியார் வாகனம்... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை | TN Govt

x

விதிகளை மீறி, தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகள், பெயர்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடரும்படி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்