சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 20 பயணிகள் காயமடைந்தனர். செஞ்சியில் இருந்து, 40 பயணிகளுடன் விழுப்புரத்திற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, மேல்சேவூர் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்திலிருந்த 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சாலையின் குறுக்கே போட்டு வைத்திருந்த அவுரி செடியால், பேருந்தின் சக்கரம் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்