பொங்கல் விடுமுறை...மெட்ரோ ரயில் அட்டவணை மாற்றம்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 முதல் 10 மணி வரையிலும், 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல், இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல், 11 மணி வரை, 15 நிமிட இடைவெளியிலும் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்