"கடைகளை 12 மணிக்குள் பூட்டு என போலீசார் நிர்பந்திக்க கூடாது" - விக்கிரமராஜா காட்டம்

x

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சென்னை மாநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் 42 வது ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகத்தில், டீக்கடை போன்ற ஒரு சமத்துவ இடத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது என்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பல்வேறு மாவட்டங்களில் கடையை மூட வேண்டும் என காவல்துறை கிடுக்குப்பிடிகள் தொடர்வதாக வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்