கணவனாக மாற முயன்ற போலீஸ் காதலன் - "காதலி அறையில் உயிரிழந்த காவலர்"

x

சென்னை, மணலி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் விக்னேஷ். இவர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரை காதலித்தாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்வது குறித்து பெண் காவலருடன் பேசுவதற்காக அவர் தங்கி இருக்கும் குடியிருப்பிற்கு விக்னேஷ் சென்று இருக்கிறார். அங்கே இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் பெண் காவலர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை விக்னேஷ் இழந்திருப்பது தெரியவர, இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்