மனைவி பிள்ளையை உதறிய காவலர்.. காதலியோடு உல்லாச வாழ்க்கை... - குழந்தையோடு கதறிய பெண்

x

கரூரில் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டதாக ஆயுதப்படை காவலர் மீது அவரது மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கரூர் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த லதா, அதே பகுதியை சேர்ந்த சரவணனை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 2 வருடங்களில் சரவணனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் சரவணன், சுபாஷினி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது குறித்து கேட்ட லதாவை அவர் அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்