ரூம் போட்டு கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

சென்னை அருகே, கஞ்சா விற்பனை செய்ய தனியாக அறை எடுத்து தங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, சந்தேகத்திற்கு இடமமாக வந்த நபரை மடக்கி போலீசார் விசாரணை நடத்தியபோது, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என தெரியவந்தது. அப்போது போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆகாஷ் தனது நண்பர்களான சஞ்சீவ், சஞ்சய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, கஞ்சா விற்பனை செய்ய தனியாக அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்