மாற்றுத்திறனாளி கை, கால்களை கட்டி வீட்டை பூட்டி கொளுத்திய நபர்கள் - சாகும் நொடியில் வாக்குமூலம்..

x

நாகை அருகே கை, கால்களை கட்டிப்போட்டு மாற்றுத்திறனாளி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேஷ்... இவரது மனைவி செல்வி, 100 நாள் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற நிலையில் தனது கூரை வீட்டில் ராஜேஷ் தனியாக இருந்துள்ளார். அப்போது, ராஜேஷின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர், கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் இருந்த ராஜேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 80 சதவீத தீக்காயங்களுடன் இருந்த ராஜேஷ், நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துவிட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்