திடீரென கலெக்டர் கார் முன் விழுந்த மக்கள் - தேனி அருகே பரபரப்பு

x

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். சின்ன ஓவுலாபுரம் கணேஷ்நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி, கழிவு நீர் வாய்க்கால் போன்ற அடிபடை வசதிகள் இல்லாததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று காரில் திரும்பிய மாவட்ட ஆட்சியரை வழிமறித்த மக்கள், தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்