மக்களே உஷார்..அடுத்த 24மணி நேரத்திற்கு சம்பவம் செய்யப்போகும் வானிலை

x

அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நெல்லை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், குமரி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது... தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல், மத்திய, தெற்கு, மத்திய மேற்கு, தென்மேற்கு, வடமேற்கு வங்கக் கடல், கர்நாடக கடலோரம், கேரள கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்