தள்ளாத வயதிலும் தளராத பாட்டி..100வது வயதில் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசித்த மூதாட்டி

x

கேரளாவில் 100வது வயதில் சபரிமலைக்கு சென்று, தனது நீண்டகால ஆசையை, மூதாட்டி ஒருவர் நிறைவேற்றியுள்ளார்.

கேரள மாநிலம், வயநாட்டை சேர்ந்த மூதாட்டி, பாருகுட்டி அம்மா. இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. சபரி மலைக்கு இருமுடி எடுத்து செல்ல வேண்டும் என்பது, இவரது நீண்டகால விருப்பமாக இருந்துள்ளது. இதனை அறிந்து கொண்ட மூதாட்டியின் பேரன், மூதாட்டியை டோலி மூலம் சபரிமலைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார். இதனையடுத்து, 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, பதினெட்டு படிகளையும் ஏறி, மூதாட்டி ஐயப்பனை தரிசித்தார். இந்த சம்பவம் ஐயப்ப பக்தர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்