பெற்ற மகளை துடிதுடிக்க அடித்தே கொன்ற பெற்றோர்... ஏரியில் உடைந்த பொத்தி வச்ச `ரகசியம்'

x

பெற்ற மகளை துடிதுடிக்க அடித்தே கொன்ற பெற்றோர்... ஏரியில் உடைந்த பொத்தி வச்ச `ரகசியம்'

#krishnagiri #parents #daughter #love #police #crime #thanthitv

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்துள்ள பட்டவாரப்பள்ளியை சேர்ந்த அரசு பள்ளி மாணவியும், சிவா என்பவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. அதனை மாணவியின் பெற்றோர் கண்டித்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் இருவரும் மாயமாகினர். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், சிவாவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவுடன், மாணவி காதலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், மாணவியை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஏரியிலிருந்து மாணவியின் சடலத்தை மீட்ட போலீசார், இளம்பெண்ணின் பெற்றோர், பெரியம்மா உட்பட 3 பேரை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்