போதையில் லஞ்சம் கேட்டு டார்ச்சர்.. லாரி ஓட்டுரை பாடாய் படுத்திய போலீஸ்

x

சென்னை பல்லாவரம் அருகே, மதுபோதையில் லஞ்சம் கேட்டு பிரச்சினை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பொழிச்சலூர் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநரிடம், மதுபோதையில் நின்றுகொண்டிருந்த போலீஸ் ஒருவர், 500 ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.


அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து அபராதம் விதிக்கும் கருவியை எடுத்து வந்து, நோ பார்க்கிங்கில் லாரி இருப்பதாகக் கூறி,


500 ரூபாய் அபராதம் விதித்ததோடு, தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்