பெண் பொறுப்பாளருக்கு பாலியல் தொந்தரவு..! பாஜக நிர்வாகி மீது வழக்கு.. பழனியில் பரபரப்பு

x

காலை உணவுத் திட்ட பெண் பொறுப்பாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாஜக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல அவர் பணியில் இருந்த போது, புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், பாஜகவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள மகுடீஸ்வரன் என்பவர், பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவான மகுடீஸ்வரனை தேடி வருகின்றனர். இதனிடையே, மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்