நெல்லை டூ சென்னை - பறக்க காத்திருக்கும் 'வந்தே பாரத்'.. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

x

சென்னை - நெல்லை உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

நெல்லையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று 12.30 மணிக்கு பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக, ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாவட்ட எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளனர். வந்தே பாரத் ரயிலின் நிறுத்தங்களான, விருதுநகர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலின் கட்டண விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய பண்டிகை நாட்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்