பொதுத்தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் | அதிர்ச்சியில் கல்வித்துறை | பறந்த அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் கடந்த மே மாதம் 5ஆம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். இதில், ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தமாக 6 லட்சத்து 69 ஆயிரத்து 467 தேர்வுகளில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதையடுத்து, அந்த மாணவர்களை கண்டறிந்து, ஜூலையில் நடைபெறும் உடனடித் தேர்வுகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இதற்கான செயல் திட்டத்தை தயார் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வாட்ஸ்ஆப் மூலம் அறிவறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்