"எங்கள் சின்னமே எங்கள் தலைவர் தான்" - காளியம்மாள் பரபரப்பு பேச்சு | Seeman | NTK

x

தங்களுக்கு சின்னத்தில் நம்பிக்கை இல்லை என, நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள் தெரிவித்தார். சீர்காழியில் பிரச்சாரம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க திட்டமிட்டு தேர்தல் ஆணையம் மூலம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். முன்னுரிமை அடிப்படையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ததாக கூறும் தேர்தல் ஆணையம், எத்தனை நிமிடங்கள் முன்னுரிமை என்பதை வெளிப்படையாக கூற வேண்டும் என்று தெரிவித்த காளியம்மாள், தங்களது சின்னமே தங்களது தலைவர் தான் என்றும் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்