பண்ணை வீட்டில் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

x

பண்ணை வீட்டில் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, பெரியகுளத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில், திருச்சி மாவட்ட ஆதரவாளர்கள் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் தொடரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக ஓபிஎஸ்ஸை சந்திப்பதற்கு அவருடைய ஆதரவாளர்கள் யாரும் வராமல் இருந்தனர்.

இந்நிலையில் திருச்சி நகர மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர், உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் அவரை திடீரென்று சந்தித்தனர்.

அதில், வெல்லமண்டி நடராஜன், ரத்தினவேல், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்