எக்ஸ் தளத்தில் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ள `OPS' - கடுப்பான `EPS'

x

எக்ஸ் தளத்தில் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ள `OPS' - கடுப்பான `EPS'

அ.தி.மு.க.-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, எக்ஸ் தளத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளது, தேர்தல் நேரத்தில் கட்சி நடவடிக்கைகளில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஓ.பி.எஸ். தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்