"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம்" - முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

x

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலின் போதும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, படித்தவர்கள் வாக்களிக்க வர வேண்டும் என்றார். இதற்காக அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தான் என்ற கிருஷ்ணமூர்த்தி, அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்