அப்பளத்தில் கலக்கப்பட்ட கெமிக்கல்அதிர்ந்து போன அதிகாரிகள்...! | சேலத்தில் அதிர்ச்சி

x

சேலம் மாநகரில், புகாரின் பேரில் செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல் அப்பளம் தயாரிக்கப்படுகிறதா என 4 நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சிவதாபுரத்தில் உள்ள நிறுவனத்தில் செயற்கை நிறம் கலந்த 300 கிலோ குழல் அப்பளமும், கந்தம்பட்டியில் உள்ள நிறுவனத்தில் 3,440 கிலோ குழல் அப்பளமும் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு உணவக பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அதிகாரிகள், செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல் அப்பளம் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ நடவடிக்கை பாயும் என எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்