காவலரை கத்தியால் தாக்க முயன்ற பிரபல ரவுடிகள் - தூத்துக்குடியில் பயங்கரம்

x

தூத்துக்குடியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை பிரபல ரவுடிகள் அரிவாளால் தாக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி, பெரிய கோவில் தெரு பகுதியில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் இருவர், போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உடனே, துப்பாக்கி முனையில் இருவரையும் போலீசார் கைது செய்த போது, இருவரும் பிரபல ரவுடிகளான சந்தனராஜ் மற்றும் செல்வம் என்பது தெரியவந்தது. இருவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி என ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்கள் முன்பு செங்கல்பட்டு அருகே இரவு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இதே பாணியில் போலீசாரை தாக்க முயன்ற ரவுடி இருவரை என்கவுன்ட்டரில் சுட்டு கொன்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்