வாங்காத கடனுக்கு வந்த நோட்டீஸ்.."வங்கி கணக்கு போதுமாம் ஏமாத்த" - பொதுமக்களே ஜாக்கிரதை

x

சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பிரேமலதா என்பவர், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக, அவருடைய மகன் ரோகித் குமாருக்கு தகவல் வந்தது. தனது தாயார் கடன் வாங்காத நிலையில், இதுகுறித்து பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று முறையிட்டபோது, அவர்கள் முறையாக பதில் அளிக்காமல், அவமரியாதையாக பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்ததன் பேரில், மயிலாப்பூர் துணை ஆணையர் விசாரணை நடத்தினார். விசாரணையில், பிரேமலதாவின் வங்கிக் கணக்கை மோசடி செய்து பணம் எடுத்திருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதும், பைனான்ஸ் நிறுவனம், உடனடியாக மீதமுள்ள பணத்தை பிரேமலதாவின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கை விவரங்களைப் பெற்று கொண்டு மோசடி நடைபெறுவதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்