கடை இல்லை..! பரோட்டா இல்லை..! ஓனரை வெறியோடு கட்டையால் அடித்து தூக்கி Smack போட்ட மர்ம கும்பல்

x

ராமநாதபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், பரோட்டா தீர்ந்து போனதால் ஹோட்டல் உரிமையாளரை கும்பல் கட்டையால் தாக்கும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கடை அடைக்கும் நேரத்தில் வந்து பரோட்டா கேட்ட கும்பலிடம், பரோட்டா இல்லை என கூறியதால் ஹோட்டல் உரிமையாளரான அப்துல் லத்தீப்பை கும்பல் தாக்கியுள்ளனர். கடந்த 21 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் புகாரளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென காவல்துறை மீது குற்றம்சுமத்தப்படும் நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்