"இந்த தண்ணியை எப்படி குடிக்க" - என்.எல்.சிக்கு கோரிக்கை மக்கள்

x

நெய்வேலி அருகே என்.எல்.சி மாற்று குடியிருப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு

மாற்று குடியிருப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டது.

அங்கு வசித்து வரும் மக்கள் கடந்த

15 நாட்களுக்கும் மேலாக மின்சாரம், சுத்தமான குடிநீர் இன்றி அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் , இதனால் உடனடியாக என்எல்சி நிறுவனம் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்