தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

x

தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்க டால்பின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேட்டையாடுதல், காலநிலை மாற்றம், மீன்பிடி வலைகளில் சிக்குதல் போன்றவற்றால் பல்வேறு அச்சுறுத்தல்களை டால்பின்கள் எதிர்கொள்கின்றன. அதன்படி, டால்பின்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. சிறப்பு ரோந்து பணிகள் மூலம் வேட்டை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், சுருக்குமடி வலைகளை அகற்றுதல், "தேசிய டால்பின் தினத்தை" கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்