தீபாவளி பண்டிகை.. திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

x

திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 260 தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, 200 பெண் பணியாளர்களுக்கு சேலை மற்றும் 60 ஆண் பணியாளர்களுக்கு வேட்டி, சட்டை வழங்கினார்.

புத்தாடைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு, நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்