"நாளை முற்றுகை போராட்டம்.." - கூடங்குளம் மக்கள் எடுத்த முக்கிய முடிவு

x

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், உள்ளூர் மக்களை புறக்கணித்து, அனுமின் நிலையம் சார்பில், நாளை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடங்குளத்தில் பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், பணி வழங்குவதில் உள்ளூர் மக்களை புறக்கணித்த கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அப்படி தேர்வை ரத்து செய்யாவிட்டால், தேர்வு நடைபெறும் மையம் முன்பு, நாளை முற்றுகைப் போராட்டம் என முடிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்