செல்லமாக பேசி மகளை காட்டுக்குள் அழைத்து சென்று தந்தை செய்த பயங்கரம்.. நடுங்கும் பாளையங்கோட்டை

x

நெல்லை பாளையங்கோட்டை அருகே இளம்பெண் ஒருவரை அவரது தந்தையே தலையை துண்டித்து கொலை செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்த கொம்பையா என்பவரது மனைவி முத்துப்பேச்சி. இவர், கணவருடன் தகராறு ஏற்பட்டதால், ஓராண்டுக்கு முன்பு பிரிந்து தந்தை மாரியப்பனுடன் வசித்து வந்தார். அங்கு, முத்துப்பேச்சிக்கும் உறவினர் ஒருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகவும், அதனை தந்தை மாரியப்பன் கண்டித்த‌தாகவும் தெரிகிறது. ஆனால் முத்துப்பேச்சி கேட்காத‌தால், மேலப்பாட்டத்தில் உள்ள பாட்டி வீட்டில் விடுவதாகக் கூறி, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மாரியப்பன், காட்டுப் பகுதியில் வைத்து அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால், காட்டுப்பகுதிக்குள் தப்பியோடிய முத்துப்பேச்சியை துரத்திச் சென்று, தலையை துண்டித்து மாரியப்பன் கொலை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ பகுதியில் நின்றுக் கொண்டிருந்த மாரியப்பனை பிடித்து விசாரித்தபோது, கொலைக்கான காரணம் தெரிய வந்த‌து. தந்தையே பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்