இறுதிக்கட்டத்தில் ஊசலாடிய உயிர்...அறக்க பறக்க நடந்த திருமணம்...கண்ணீருடன் கிடைத்த ஆசிர்வாதம்

x

திருச்சி இனாம்ரெட்டிய பட்டியைச் சேர்ந்த சக்திவேல் மகள் நிவேதா... தனியார் நூற்பாலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்க துணை நின்ற நிவேதாவுக்கு பிப்ரவரியில் திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டது... ஆனால் ஏற்கனவே உடல் நலக் குறைவாக இருந்த சக்திவேல் தீவிரமாக பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... தந்தை இருக்கும் போதே நிவேதாவின் திருமணத்தை நடத்திட நினைத்த உறவுகள் விடத்திலாம்பட்டி முருகன் கோவிலில் மிகவும் எளிமையாக விழாவை நடத்தினர்... திருமணம் முடிந்த கையோடு நிவேதா தனது தந்தையிடம் ஆசி பெற மருத்துவமனைக்கு வந்தார்... கண்ணீர் தாரை தாரையாய் ஊற்ற நிவேதா தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று தன்னைத் தூக்கி வளர்த்த தந்தையிடம் ஆசி பெற்றார்... இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்