ஓடையில் குவியல் குவியலாக அரசு ஆவணங்கள்... அதிர்ந்த மக்கள்... நாங்குநேரியில் பரபரப்பு

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, ஓடை அருகில் ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய தபால்கள் விநியோகிக்கப்படாமல் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நாங்குநேரி அருகே அரியகுளம் எடுப்பல் கிராமத்தில் உள்ள குளத்தில் நீர் நிறைந்து, உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறுகிறது. இதனால் அங்குள்ள சாலை சேதமடைந்து அதனை சரிசெய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மறுகால் ஓடையோரத்தில் குவியல் குவியலாக, விநியோகிக்கப்படாத தபால்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில், பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஆதார் அட்டை, எல்.ஐ.சி, வங்கி, அரசுத்துறை மற்றும் தனிநபர் கடிதங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தண்ணீரில் சேதமடையாமல் கிடந்த ஆதார் அட்டைகளை, சம்பந்தப்பட்ட முகவரியில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்