நாங்குநேரி கொடூர சம்பவம் - உறுதியாக சொன்ன அமைச்சர் உதயநிதி

x

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு அரசு என்றும் துணை நிற்கும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப்பட்ட 2 குழந்தைகளின் குடும்பத்தினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குழந்தைகள் இருவரும் நெல்லையில் உள்ள பள்ளியில் படிப்பை தொடர்வதற்கான சேர்க்கை ஆணைகள் மற்றும் அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். மேலும், நெல்லையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தாயார் பணிபுரியும் வகையில் பணி மாறுதல் ஆணையையும் வழங்கினார். இதனிடையே,

சாதிய ஏற்றத்தாழ்வு, ஆதிக்கம் ஒழித்து சமத்துவ சமுதாயம் அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்