நாமக்கல் டூ அயோத்தி.. தயாராகும் பிரம்மாண்ட மணி

x

அயோத்தி ராமர் கோயிலுக்காக நாமக்கல்லில் ஆலய மணிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அக்கோயிலுக்காக மணிகள் செய்யுமாறு நாமக்கல்லில் உள்ள நிறுவனத்திற்கு, பெங்களூரை சேர்ந்த பக்தர் ஆர்டர் அளித்துள்ளார். அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து, 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில், 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை செய்துள்ளனர். மணிகளை தயார் செய்த தொழிலாளர்கள், தங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்