"நல்லா கிட்ட வந்து பேசிட்டு இருந்தாங்க...ஒருத்தர கடலில் தள்ளிவிட்டாங்க..." - தொடரும் அட்டூழியம்

x

வேதாரண்யத்தை சேர்ந்த 4 மீனவர்கள், கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை சாரமாறியாக தாக்கியதோடு, கை கால் முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளனர். பின்னர், 3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, 4 செல்போன்களை கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். காயமடைந்த நிலையில் அவசர அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்