"10 நாள் முன்ன தான் வீட்டுக்கு வந்துட்டு போனான்" - மும்பையிலிருந்து பிணமாக வந்த நாகை இன்ஜினியர்

x

மகாராஷ்ட்ராவில் கிரேன் விபத்தில் உயிரிழந்த பொறியாளர் கண்ணனின் உடல், நாகை வேதாரண்யத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வேதாரண்யம் அடுத்துள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன், கடந்த ஓராண்டாக பொறியாளராக பணியாற்றி வந்தார். மகாராஷ்ட்ர மாநிலம் தானேயில் நிகழ்ந்த கிரேன் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் அங்கிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்