வீட்டிலிருந்து மாயமான அண்ணி, மைத்துனர்...மரத்தில் சடலமாக தொங்கிய பயங்கரம் - அதிர்ச்சி சம்பவம்

x

வீட்டிலிருந்து மாயமான அண்ணி, மைத்துனர்...மரத்தில் சடலமாக தொங்கிய பயங்கரம் - அதிர்ச்சி சம்பவம்

மதுரையில், காணாம் போன இருவர், மதுராந்தகம் அருகே மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம் அருகே சிலாவட்டம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில், ஆண், பெண் இருவரும், வேப்பமரத்தில் தூக்கிட்டு தொங்கியபடி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள்,

மதுரையை சேர்ந்த அருள்ஜோதி, முத்துலட்சுமி என தெரியவந்தது. அண்ணி, மைத்துனர் உறவு முறையாகும் இருவரும், கடந்த 4ம் தேதி முதல் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர். இந்த நிலையில்,

இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்