கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணை - 15 ஆண்டுகளாக தலைமறைவு - பொறிவைத்து பிடித்த போலீஸ்

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் மெயின் பஜாரில் உள்ள பள்ளிவாசலுக்குள், கடந்த 2006 ஆம் ஆண்டு நுழைந்த சிலர் அடிதடி தகராறு என வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கபீர் என்பவர், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு படி, கபீரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், கடையநல்லூரில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கபீர், தென்காசியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எனவும், ஒவ்வொரு முறையும் தன் பெயரை மாற்றி மாற்றி போலீசாரிடமிருந்து அவர் தப்பி வந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்