தாய் - மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - நீதித்துறை நடுவர் விசாரணை

x

அருப்புக்கோட்டையில், சில தினங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகி, வீட்டில் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில், குறிஞ்சா குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவமானத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், மகனின் உடலை வாங்க கோட்டாட்சியர் வாகனத்தில் வந்த தாய் தேவி, ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்து இசக்கி, விருதுநகர்அரசு மருத்துவமனையில் தேவியின் உடலை வாங்க காத்திருந்த உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்