மொத்தமாக சுருட்டிய நிறுவனம்...ஓய்வு பெற்ற போலீஸாருக்கு காத்திருந்த `ஷாக்'

x

மதுரையை சேர்ந்தவர் மோகன் தம்பி ராஜா. கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரை, அவரது உறவினரான நித்தியா என்பவர் தான் மேலாளராக பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனத்தில் பண முதலீடு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. முதலீடு செய்யும் பணத்திற்கும் அதிக வட்டியும், இறுதியில் நிலமும் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய நிலையில், மோகன் தம்பி ராஜா 14 லட்ச ரூபாய் பணம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் முறையாக வட்டிப் பணம் கொடுத்து வந்த நிறுவனம், அதன் பின் பணம் கொடுப்பதை நிறுத்தியதாகவும், பின் நிறுவனம் மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறும் மோகன் தம்பி ராஜா, ஒரு வருடமாக பணத்தை கொடுக்காமல் நிறுவனத்தினர் இழுத்தடிப்பதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்