தர்கா இடத்தில் சாமி சிலைகளை வைத்து கும்பல்.. குவிந்த போலீசார்.. செஞ்சியில் பரபரப்பு

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தர்காவுக்குச் சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில், காஜா பதர்ஷா முகமது தர்காவுக்குச் சொந்தமான இடத்தில், இரவோடு இரவாக அம்மன் சிலை, சிவலிங்கம், விநாயகர் சிலை உட்பட 7 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற வருவாய்த்துறையினர், போலீஸ் உதவியுடன் சிலைகளை அப்புறப்படுத்தி, கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக செஞ்சி டி.எஸ்.பி. கவினா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்