2 குழந்தைகளுடன் காணாமல் போன மகள்... பெற்றோர் வைத்த முக்கிய கோரிக்கை

x

2 குழந்தைகளுடன் காணாமல் போன மகள்... பெற்றோர் வைத்த முக்கிய கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இரண்டு குழந்தைகளுடன் பெண் மாயமான விவகாரத்தில், தமிழக அரசு தலையிட்டு மகளை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகமது அலி-மும்தாஜ் பேகம் தம்பதியினரின் இரண்டாவது மகளான பர்வீன் பானு,

இரு குழந்தைகளுடன் காணாமல் போனதாக

அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போய் ஒரு மாதம் கடந்தும் மகள் கிடைக்கவில்லை என்றும், காவல்துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்