மனநலம் குன்றிய மகனும்...அரசின் உதவி தொகைக்காக போராடும் தந்தையும் ...

x

மனநலம் குன்றிய மகனுக்கு பல ஆண்டுகளாக அலைந்தும் அரசு உதவித்தொகை கிடைக்காததை கண்டித்து, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன் தந்தை, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாலை ஏகாம்பரநல்லூரைச் சேர்ந்த சந்திரசேகருக்கு மூன்று மகன்கள். இதில் இரண்டாவது மகன் அருண் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அவருக்கு மாதாந்திர அரசு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்தும், அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்