"ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் வழங்கியதற்கு இதான் காரணம்" - தேர்தல் அலுவலர் சொன்ன தகவல்

x

திருச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்த‌தால், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் ஒதுக்குமாறு வேட்புமனுவில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்வதாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். பதிவு பெற்ற அரசியல் கட்சி என்ற முன்னுரிமையில் மத‌முகவுக்கு தீப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்