ரிப்பன் மாளிகையில் கொடியேற்றி மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட மேயர் பிரியா

x

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டும், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகழித்த அவர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதை தொடர்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை மேயர் பிரியா வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்