மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியருக்கு சாவுக்கு நிகரான தண்டனை

x

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த நாராயணபிரசாத் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பள்ளி தலைமை ஆசிரியர் இளவரசன் அளித்த புகாரில் 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாகை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி மணிவண்ணன், குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 70,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்