ஊரை விட்டு ஒதுக்கி ஊர் மக்கள்.. கலெக்டர் ஆபிசில் தீக்குளிக்க முயன்ற பெண்.. மயிலாடுதுறையில் பரபரப்பு

x

நல்லத்துக்குடியைச் சேர்ந்த தம்பதியர் முருகன்-கனிமொழி... இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடப்பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி கனிமொழி தீக்குளிக்க முயன்றார். இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அவர், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு மற்றொரு சமூகத்தினர் தொடர்ந்து பிரச்சினை அளித்து வருவதாகவும், கோவிலுக்கு செல்லக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரைவிட்டு தங்களை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்