முகமூடி அணிந்த மர்ம நபர்கள்... அடகு கடையை உடைக்க முயற்சி - அலாரம் அடித்ததால் தப்பியோட்டம்

x

சூலூர் அருகே, மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன், அடகு கடையை உடைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அரசூர் பகுதியில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், அடகு கடையின் பூட்டை உடைத்து, கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.

இதனிடையே, சிசிடிவி கேமரா இருப்பதை தெரிந்து கொண்ட அவர்கள், அதை மறைக்க முயற்சித்தபோது, கடையில் இருந்த அலாரம் அடித்ததால், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்